The
visit to the Sri Balapaththira Rameswarar Temple at Thirumetrali Street was
part of the Mahashivaratri 2026 darshan of Shiva Temples in and around
Kanchipuram, on 15 February 2026. This Spiritual Tour was organised by Chithiram PesuthadaGroup.
Thanks to Suresh and Krishna.
This
temple is inside the Kanchi Global Matriculation School, which may be approached
through a small lane on the Sri Metraleeswarar temple road.
Moolavar:
Sri Balapaththira Raameswarar
Some
of the salient features of this temple are…
The
temple faces east. Vinayagar is on the left side of the sanctum sanctorum. The
Moolavar is a little tall without avudaiyar. No images are in the koshtas.
Shiva Linga is without avudaiyar
Balarama with a plough
ARCHITECTURE
The
total temple was constructed with bricks and cement concrete. The temple
consists of the sanctum sanctorum and a mukha mandapam. The sanctum sanctorum is
on an upanam and pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and
pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of Brahmakantha
pilasters with kalasam, kudam, palakai, and potyal. The prastaram consists of
valapi and kapotam with nasi kudus. An eka tala nagara vimanam is on the bhumi
desam. Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are in the greeva koshtams.
HISTORY
AND INSCRIPTIONS
It
is believed that the original temple was built in the Pallava period. Since this temple’s
Sthala Purana was written by 18th-century Sivagnana Swamigal, the temple existed even in the 18th century. Then the Shiva Lingam alone existed on the same spot till 2018, and a new temple was built with bricks and
cement by the devotees.
After
the temple reconstruction, Maha Kumbhabhishekam was conducted.
LEGENDS
It
is believed that Balarama one the Maha Vishnu’s avatar worshipped Shiva of this
temple. To signify this, a stucco image of Balaramar with “Ear – கலப்பை”,
worshipping Shiva is on the top of the mukha mandapam.
பலபத்திர ராமேசப் படலம்
பகலோனைப் பல்லுகுத்து
மதியைத் தேய்த்துப் படைவேளைப் பொடிபடுத்த பழையோன் என்றுந், திகழ்வீர ராகவேச் சரத்தி னோடு
திருத்தகுகற் கீச்சரமும் புகன்றாம் இப்பால்,புகழுறுகற்
கீச்சரத்தின் மேல்பால் கண்டோர் பொருவலித்திண் பகட்டூர்தி உடையக் காணும், நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது நீடு -திருத் தான வளம் பாட லுற்றாம். 1
சூரியனது பற்களைத் தகர்த்துச் சந்திரனைக்
காலால் தேய்த்துச் சேனைகளையுடைய மன்மதனை நீறு படுத்திய புராணன் என்றும்
விளங்குகின்ற வீரராகவேச் சரத்தினோடு செல்வ மருவிய கற்கீச்சரத்தையும்
எடுத்துரைத்தனம். இனி, புகழ்
மிகும் கற்கீச்சரத்தின் மேற்கில் தரிசித்தோர், பொருகின்ற
திண்ணிய வலியமைந்த கடா வாகனத்தையுடைய இயமனைப் புறங்காணுதற்கு இடனாகிய பலபத்திர
ராமேச்சரம் என்று பேசப்பெறும் நிலைபெறும் “திருவினையுடைய தலத்தின் வளத்தைப் பாடத்
தொடங்கினோம்.
மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்
கண்ணன் முன்வரு காளை அலப்படை
அண்ண லாம்பல பத்திர ஆண்டகை
பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள். 2
மண்ணிடத்து மிக்கு விளங்குகின்ற
துவாரகையில் அவதரித்த கண்ணபிரானுக்கு முன்னர்த் தோன்றிய காளைப் பருவமும்
உழுபடையும் உடைய தலைமை அமைந்த கலப்பைப் படையினையுடைய ஆண்டகை தேரும், குதிரையும் பிறவும் பண்ணுகின்ற போர்க் கோலம்
செய்த கொடிய பாரதப் போர் மூண்ட காலத்தில்,
கார்த்த டக்கைக் கடும்புசெய் கைதவப்
போர்த்தொ ழிற்குப் பொறாத மனத்தனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்
ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான். 3
மேகம் போலும் கொடையினையுடைய பெரிய
கையினையுடைய சுற்றத்தவர் செய்கின்ற வஞ்சகப் போருக்குப் பொறாத உள்ளத்தவனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான். அழகிய சரசுவதி நதிக் கரையை அடைந்தான்.
அங்கண் முப்புரம் அட்ட பிரான்தளி
எங்கும் உள்ளன நோக்கி இறைஞ்சி அத்
துங்க வைப்பினில் தொக்க முனிவரர்
தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான். 4
அக்கரையில் திரிபுரத்தை அழித்த பெருமான்
வீற்றிருக்கும் திருக்கோயில்கள் எங்கும் உள்ளவற்றைக் கண்டு தொழுது அவ்வுயர்ந்த
தலத்திற்குழீஇயிருந்த முனிவரர்களைத் தொழுது வினாவுவான்.
ஈசன் வைகும் இடங்கள் எவைஎவை
ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்
தேசின் மிக்க திருநகர் யாவது
பேசு கென்ன முனிவரர் பேசுவார். 5
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள்
எவ்வெவை குற்றமின்றி உயர்வுறும். அத்தலங்களின் மேலதாய் அருள் விளக்கம் மிக்க
திருக்கோயில்யாது? அதனைக் கூறுக
என்று வேண்ட முனிவரர் கூறுவார்.
நகர் - திருக்கோயில் ; " முக்கட் செல்வர் நகர் "
(புற .6:18)
பருவ ரைத்தோட் பரதன் வசூடமே
கரும பூமி எனப்படுங் காண்அது
மருவும் எவ்வுல கத்தினும் மாண்டதாம்
திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே. 6
அழகின் பொலிவும் தேனும் மருவிய பனப்பூ
மாலையை யணிந்த மார்பினனே! பருத்த மலையை ஒக்கும் தோள்களையுடைய படை- பரதன் ஆட்சி
செய்தமையால் பெயரிய பரத கண்டமே கரும பூமி எனப்பெறும் அறிதி, அக்கண்டம் எவ்வுலகத்தினும்
மாட்சிமையுடையதாகும். பலம் கலப்பையின் கொழு, பத்திரம் படை.
கரும பூமி வரைப்பிற் கடவுளர்
மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்
அருள்வி ளைக்கும் அவற்றினும் மேலவாம்
தரும சக்கர பாணி தலங்களே. 7
மாண்பின் மிக்கோனே! கரும பூமியாகிய
பரதகண்டத்தில் தேவர் கோட்டஙகள் சிறந்தன. அருள் சுரக்கும் அவற்றினும் மேன்மைய ஆகும்
அற வடிவாகிய சக்கரத்தைத் திருககையில் ஏந்திய திருமால் தலங்களே.
அவற்றின் மிக்கன மானிடர் ஆக்கிய
சிவத்த லங்கள் கடவுளர் செய்தன
அவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம்
சிவத்த லங்கள் அவற்றிற் சிறந்தன. 8
அவற்றினும், மக்கள் வகுத்த சிவபிரான் திருக்கோயில்கள் மிக் தேவர்கள்
வழிபாடியற்றிய சிவாலயங்கள் முன்னவற்றினும் சிறப்பின். தானே தோன்றிய
சிவலிங்கப்பிரான் கோயில் கொண்ட நகர்கள் தேவர் நியமித்த இடங்களிலும் சிறப்புடையன.
சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம்
வியந்தெ டுத்து விளம்பப் படும் அவை
நயந்த அங்கவற் றுள்ளும்நற் காசிமிக்
குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே. 9
தான் தோன்றீசப் பெருமான் தலங்களினும்
மேம்படுவன ஆகும் வியந்து எடுத்தோதப் படுவனவாகிய ஏழு நகரங்கள். விரும்பிய அத்
தலங்களுள்ளும் நற்காசி மிக்குயர்ந்த நகரமாகும். அத்தலத்தினும் காஞ்சியே உயர்ந்தது.
ஏழு நகர்: அயோத்தி, மதுரை, மாயை,
காசி, காஞ்சி, அவந்தி,
துவாரகை என்பன.
ஓது காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும்
பூத லத்திடை இல்லை புகலும்அம்
மாத லத்தின் உகத்தின் வருத்தமும்
பாத கப்பய னும்பட ராவரோ. 10
போற்றப் பெறும் காஞ்சி மாநர்க்கு
உயர்ந்ததும், ஒப்பதும் ஆகிய
தலம் புவியிடை இல்லை. பேசப்பெறும் அப்பெருந் தலத்தின்கண் வாழ்பவர்க்குக் கால வேறுபாடுகளினால்
வரும் துன்பங்களும், பெரும்பாவப் பயன்களாகிய நரக முதலிய
துன்பங்களும் வந்து வருத்தமாட்டா. அரோ, தேற்றப் பொருளது.
பிறந்து ளோர்கள் வதியப் பெறுநர்அங்
கிறந்து ளோர்உளத் தெண்ணுநர் யாவரும்
அறந்த ழைக்கும்ஏ கம்பர் அருளினாற்
சிறந்த முத்தி உறுவது தேற்றமே. 11
திருக்காஞ்சியில் பிறக்கும்
பேற்றினையுடையவரும், அங்குறையும்
வாழ்வுடையோரும், இறப்போரும், அத்தலத்தினை
உள்ளத்தில் நினைப்பவரும், ஆகியோர் யாவரும் அறத்தைத் தழைக்கச்
செய்யும் ஏகம்பர் திருவருளினாற் றலையாய முத்தியை எய்துவது சத்தியமே?
ஷ வேறு
என்றறி வுறுத்திய இயல்பின் மாதவர்
மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்
அன்றவர் ஏவலிற் காஞ்சி அண்மி அங்
கொன்றிய வளனெலாம் உவந்து நோக்கினான். 12
என்றறிய உணர்த்திய நற்பண்புடைய பெருந்தவர்
தம் அழகிய மணந்தங்கிய பூவையொக்கும் திருவடிகளை வணங்கி யதுகுலத்துள் தோன்றிய
பலராமன் அத்தவத்தவருடைய ஆணைவழிக் காஞ்சியை அடைந்து அங்குப் பொருந்திய வளங்கள்
அனைத்தையும் கண்டு வந்தனன்.
நோக்கி உவந்தான் - என மாறுக, இறைவனும் விழா எனும் அடைவில்
எழுந்தருளிக்காணும் வளத்தது காஞ்சி (திருநக. 70.) காண்க.
தெறுமழுப் படைச்சிவ தீர்த்தம் யாவையும்
முறைமையின் ஆடினான் முரசு கண்படா
இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண்
டறைபொழில் ஏகம்பம் அருச்சித் தேத்தினான்.13
தீவினையை அழிக்கின்ற மழுப்படையை யுடைய
சிவபிரான் தீர்த் தங்கள் முற்றவும் விதி வழி நீராடி முரச வாத்தியங்கள் இரவு பகலாக
முழங்கும் சிவபிரான் திருக்கோயில்கள் எங்கும் வழிபாடு செய்து வண்டுகள் ஒலிக்கின்ற
சோலை சூழந்த திருவேகம்பப் பெருமானை அருச்சனை செய்து துதித்தனன்.
அந்நகர் வயின் அமர்ந் தருளுஞ் சீர்உப
மன்னியன் இணையடி வணங்கித் தொண்டுபூண்
டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன்
தன்னுடைப் பெயரின்ஒர் இலிங்கம் தாபித்தான். 14
அத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிறப்பினை
உடைய உபமன்னிய முனிவர் தம் திருவடிகளை வணங்கி ஏவல் வழிநின்று நினைத்தற்கரிய பெருமை
அமைந்த திருச்சிவதீக்கையை அவரிடத்துப் பெற்று "பல பத்திரராமேசப்பெருமான்' எனத் தன்பெயரால் சிவலிங்கம் தாபித்தனன்.
உண்ணிறை காதலின் அருச்சித் தோகையால்
பண்ணிசை மொழிகளிற் பழிச்சும் ஏல்வையின்
கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர்
விண்ணவர் தொழவிடை மீது தோன்றியே. 15
உள்ளத்துள் நிறைந்த பேரன்பால் அருச்சனை
செய்து உவகை யோடும் பண்ணொடு கூடிய பாடல்களாற் பரவும் பொழுதில் நுதற்கண்ணுடைய
பெருமான் கருணை மிகுந்து தேவர்கள் தொழுதுடன் வரவிடை மேலெதிர் தோன்றி,
வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம்
பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன்
தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற்
காண்டகை இடையறா அன்பு நல்குதி. 16
வேண்டும் வரங்களைக் கூறுக என்றருள
மேற்கொண்ட பெரு மகிழ்ச்சியின் மெய்ம் முழுதும் மயிர்க் கூச்செறிந்த பலராமர்
ஆண்டகையே! திருக் கூத்திடையறாது புரியும் நின்திருவடிகளில் ஏழையேனுக்கு ஒரு
காலத்தும் நீங்காத பேரன்பினை நல்குவாய்.
இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு
நிச்சலும் இனிதமர்ந் தருளி நின்னடி
நச்சினோர்க் கிருமையும் நல்கு வாய்என
அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான். 17
'யான் வழிபாடியற்றிய
இச்சிவலிங்கத்தின்கண் உமையம்மையாரொடும் நாடோறும் இனிது வீற்றிருந்தருளி நின்
திருவடியை விரும்பினோர்க்குப் போக மோட்சங்களை அருளுவாய்' என
யாவும் அருள் செய்து மறைந்தனர்.
காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத்
தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய
சீருடை இலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்
ஏருடைக் கைலையில் இனிது வாழ்வரால். 18
காரினையேந்திய உழுபடையினையும், பளிங்கு நிறத்தினையும், பனம் பூமாலையினையும் உடைய பலராமன் தாபித்துத் துதித்த சிறப்புடைய
சிவலிங்கத்தைத் தெரிசித்தோர் யாவரும் திருக்கைலையில் இனிது வாழ்வர்.
இருளைப் போழுகின்ற பளிங்கெனினுமாம்.
போந்தின் தாருடைய வன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
பலபத்திர ராமேசப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1105
POOJAS
AND CELEBRATIONS
Apart
from oru kala poojas, no other special poojas are conducted.
TEMPLE
TIMINGS
Since
oru kala pooja is conducted, the opening and closing times are unpredictable.
CONTACT
DETAILS
HOW
TO REACH
The
temple is 1.4 meters from Kailasanathar Temple, 1.6 km from Sri Ekambareswarar Temple,
and 3.1 km from Kanchipuram Railway Station.
The nearest railway station is Kanchipuram.
LOCATION
OF THE TEMPLE: CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---















