Monday 30 August 2021
Pallava period Shiva Temple with Durgai, Mahavishnu, Murugan, Jyeshta Devi Loose Sculptures and Hero Stone & Sati Stone at Sendiyampakkam, Villupuram District, Tamil Nadu.
Saturday 28 August 2021
புலிகுத்தி நடுகற்கள், காங்கயம்பாளையம், செங்கப்பள்ளி அருகே, திருப்பூர் மாவட்டம்.
நடுகல் வழிபாடு என்பது பொதுமக்கள் நலனுக்குக்காக சண்டையிட்டு வீரமரணம் அடைபவரின் நினைவாக கல் நட்டு வழிபடுவதே ஆகும் . நடப்பட்ட கல்லின் மீது வீரனின் உருவமும் , அவன் இறப்பை பற்றிய குறிப்பும் பொறிக்கப்படும் . நடுகல் வழிபாடு என்பது வீரத்தை அடிப்படையாக கொண்ட வழிபாடு . இவை பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன . கிராமங்களில் இன்றும் நடுகற்களை சிறுதெய்வங்களாக வணங்கி வருகின்றனர் .
திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி அருகே காங்கயம்பாளையம் என்னும் ஊரில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது . இவற்றில் இரண்டு புலிக்குத்தி நடுகற் கள் மற்றொன்று நினைவுக்கல் ஆகும் . முதல் புலிக் குத்தி கல்லில் புலி தன் வாயை திறந்த நிலையில் வீரன் மேல் பாய்வது போலவும் , வீரன் ஈட்டி ஆயுதத்தால் புலியை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால்கள் இரண்டும் தன்னை தாக்க வரும் வீரனை எதிர்த்து தாக்குவது போல உள்ளது . வீரனுக்கும் புலிக்கும் நடுவே ஒரு நாய் புலியை நோக்கி பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . கல் பொரிந்த நிலையில் உள்ளது .கல்வெட்டுகள் காணப்படவில்லை .
இதற்கு அடுத்து ஒரு நினைவுக்கல் உள்ளது . இதில் வீரனின் உருவம் இரு கைகளையும் கூப்பியநிலையில் காட்டப்பட்டுள்ளது . இது வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட கல் ஆகும் .
மூன்றாவதாக மற்றொரு புலி குத்தி கல் காணப்படுகிறது . இதில் புலி வாயை திறந்த நிலையில் பாய்வது போலவும் அதன் முன்னங்காலில் ஒரு கால் வீரன் தோள் பட்டை மீதும் மற்றொரு கால் வீரனின் தொடையை பிடித்து இருப்பது போலவும் , வீரனும் தன்னை தாக்க வரும் புலியை ஈட்டியைக் கொண்டு தாக்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் வீரனின் முகம் நேராக நம்மை பார்ப்பது போல உள்ளது . இதுவும் 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது . இதிலும் கல்வெட்டுகள் காணப்படவில்லை .