Tuesday, 21 July 2026

Lakshminarayana Temple / Ancient Hoysala Sri Lakshminarayana Swamy Temple, Hosaholalu, Mandya District, Karnataka.

The visit to this Sri Lakshminaraya Swamy Temple at Hosaholalu, in Mandya District, Karnataka, was a part of “Kodagu Heritage Walk”, from 22nd to 24th May 2026, organised by எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு”. This place, Hosaholalu, was once a Chaturvedimangalam during the Hoysala period.


ஹொசஹாலலு: மைசூருக்கருகே மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டையில் மேற்காக 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். ஹொய்சாளர் காலத்தில் புகழ்பெற்ற சதுர்வேதி மங்கலமாக சமண, சைவ வைணவ கோட்பாடுகளை போதிக்கும் மடங்கள் கொண்டு திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் ராயசமுத்திரம் மற்றும் ஹொசஹொலவு என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சைவ வைணவ கோயில்கள் அழியும் தருவாயில் இருந்தபோதும் வைணவ கோயிலான லக்ஷ்மி நாராயணர் திருக்கோயில் நல்ல நிலையில் சிறப்பாக அமைந்து பக்தர்களையும் கலையார்வளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

Moolavar  : Sri Nambi Narayana, Lakshmi Narasimha and
                  Sri Venugopala.

Some of the Salient features of this temple are…
The temple faces east with an entrance mandapa. Balipeedam and dwajasthambam are immediately after the entrance mandapam. The three shrines are dedicated to Narayana, who faces east, Venugopala, who faces north, and Lakshmi Narasimha, who faces south. Dwarapalakas are on either side of the sanctum sanctorum.

Some of the deities in the praharam are Vinayagar, Mahishasuramardini and Alwars.

Lakshmi Narasimha
Venugopala
Mahishasuramardini

ARCHITECTURE
The temple was built in Hoysala architecture with soapstone (chloritic schist). The whole temple was constructed on a 4.5 feet high platform/ jagathy in a stellate form (Star shape), with conventional mouldings, the stellate corners of which are provided with sculptures of elephants denoting ashtadik gajas.


The Lakshminarayana temple is a specimen of the ornate vesara variety of Hoysala temples, assignable to the thirteenth century C.E. Stellate on plan, it is a trikutachala temple, with a common navaranga mandapam. The navaranga pillars are lathe-turned with miniature sculptures like Anjaneya, flower motifs, etc. The navranga ceiling centre lotus relief with Kalinga Narthanar looks cute. The central shrine has only with 4 tier vesara vimana, and the other two shrines are without vimanam. The sukanasi on the main shrine vimana 1st tier extends up to the antarala. The open mukha mandapa or the dance hall pillars are lathe-turned. The dancing female sculptures / Madanikas in different mudras adorn the capitals of these pillars.

On the adhistanam, i.e., below the decorative panels, are 6 rectangular mouldings with equal width, which run around the temple. The jagathy consists of six horizontal mouldings of the adhistana, which include intricately sculptured friezes. The first moulding frieze depicts birds (hansa), the second depicts the mythical makara, and the third frieze has depictions of Ramayana, Mahabharata, and Bhagavata Purana legends narrated in the clockwise direction (direction of devotee circumambulation). The fourth frieze has leafy scrolls; the fifth and sixth friezes have a procession of horses and elephants, respectively. In the frieze that depicts the epics, the Ramayana starts from the western corner of the southern shrine, while the Mahabharata starts from the northern side of the central shrine, vividly illustrating the demise of many heroes of the famous war between the Pandavas and the Kauravas.

The wall of the temple has about 120 panels, most of them related to Vaishnavism. The 24 sculptures of Maha Vishnu are with chaturbhuja holding Shankha and Chakra, lotus, and mace, in different combinations. Some of the panels are like Panduranga, Govardhandhari, Kalinga Narthana, Sarasvati, Madhava, Dhanvantari, Dakshinamurti, and Mohini, which are noteworthy amongst the wall sculptures. Some of the sculpture panels related to Shaivism and Shaktism. One of the Hoysala Shaktism panels of Mahishasuramardini is also seen in this temple.

The superstructure over the western shrine of four talas has intricately sculptured hara units, of which prominent ratha projections have sculptural depictions of various deities. The stupi is in the form of an inverted stupi and has a finial atop; the sides and mahakasa of the sukanasa are also well carved.

The mukha mandapa built of granite blocks towards the east is obviously a later addition of 17 century CE, maybe during the Vijayanagara period.
 
மேலை சாளுக்கியரின் கூட்டல் வடிவ (cruciform) அமைப்பினின்றும், சோழர்களின் நீள்சதுரங்க (rectangle) கோயில் கட்டிட அமைப்பினின்றும் முற்றிலும் மாறுபட்ட நட்சத்திர (stellar) வடிவ அமைப்புடைய கோயில்களை அறிமுகப்படுத்தினர். தென் கர்நாடகப்பகுதிகளில் பெருமளவு கிடைக்கும் மாக்கல்லினை (chlorit schist soap stone) கொண்டு கோயில்களை அமைத்தனர். இக்கல்லின் சிறப்பம்சம் யாதெனில் பாறையினின்று வெட்டியெடுத்து சிற்பங்களாக செதுக்கும் வரை இலகும் தன்மையுடையனவாகவும் (malleable and ductile) சூரிய ஒளி பட்டவுடன் இறுகி கடினமாகிவிடும் இந்த கருமை மற்றும் இளம்பச்சை நிறம் கொண்ட மாக்கல்லினால் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களையும் கடைந்தெடுத்த வழுவழுப்பான தூண்களையும் அமைத்து கண்கவர் கோயில்களை கட்டினர். சிற்பிகள் தத்தம் பெயர்களை தங்களது படைப்புகளில் பொறித்து வைத்தனர். இதன் மூலமாகவும் கல்வெட்டுகளினின்றும் அக்காலத்திய புகழ் பெற்ற சிற்பிகளையும் அவர்தம் பங்களிப்பினையும் அறிகிறோம் மல்லேஜா, மானியோஜா, மல்லிதம்மா, விபனா, மதுவண்ணா, கும்மபைரணா, தொண்டசாரி போன்றோர் பிரசித்தமான ஹொய்சாள சிற்பிகள் என்பதையறிகிறோம்.

இக்கோயிலானது ஹொய்சாள கோயில் கட்டிட மரபின்படி திரிகூடசால அமைப்பில் கட்டப்பட்டது ஜகதியானது ஒரு மீட்டர் உயரத்துடன் மேடை போன்று எழுப்பப்பட்டு அர்த மண்டபத்தை மையப்படுத்தி மூன்று கருவறைகள் கொண்ட கோயிலாகும் ஒன்றில் மட்டுமே கருவறையின் மீது சுகநாசியுடன் கூடிய விமானம் கட்டப்பட்டுள்ளது. மற்றவை வெறும் தளங்களாக விடப்பட்டுள்ளன. கருவறைகள் மூன்றும் இடைநாழியுடன் நவரங்கம் எனப்படும் அர்த்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதன்மை கருவறையில் நாராயணர் லலாதாம்பிகா கோலத்தில் சமபங்கமாக நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சங்கு. சக்கரத்துடனும் கீழிரு கரங்கள் முறையே கதை மற்றும் பத்மத்தை பற்றியிருக்க நுண்ணிய வேலைப்பாடுகளமைந்த அணிகலன் மற்றும் நேரத்தியான ஆடையணிந்த நிலையில் நாகவடிவ தோரணத்தின் மேற்புறம் கீர்த்திமுகம் காட்டப்பட்டிருக்கிறது. தெற்கு கருவறையிலுள்ள வேணுகோபாலசாமி சிலை தற்காலத்தில் அமைக்கப்பட்டதெனவும் பழைய சிற்பம் மைசூருக்கருகேயுள்ள கண்ணம்பாடி கிருஷ்ணர் கோயிலுக்கு எடுத்து சென்று அங்கு வழிபடுகின்றனர் என்பது இங்கு நிலவும் செவிவழி செய்தியாகும். தென்புறத்திலுள்ள கருவறையின் வாயிற்புற காவலர்கள் இருபுறமும் நின்றிருக்க மத்தியில் லக்ஷ்மிநரசிம்மர் தமது மடியில் பூதேவி சகிதமாக அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். கீழ்புறம் பிரகலாதன் பெருமாளை சேவிக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. அர்த மண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன அவை நன்கு கடையப்பட்டு வழுவழுப்பான நிலையில் நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்டு வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தூண்கள் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் வெவ்வேறு கோணங்களில் நடன மாந்தர்கள் பாங்குற காட்டப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வித விதமான அழகு புடைப்புச் சிற்பங்கள் சிற்பியின் கற்பனைக்கும் கலைத்திறனையும் நமக்கு சான்றாய் உணர்த்துகிறது. இம்மண்டபத்தில் மஹிஷாசுர மர்த்தினி மஹிஷனை வதம் செய்யும் கோலத்துடன் காட்சி தருகிறார்.

அதிட்டானம் எனப்படும் மேடை ஆறு பட்டிகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வவொரு பட்டிகைகளிலும் அன்னப்பறவைகள், யானைகள், குதிரைகள், கொடிகள், இலைச்சுருள்கள், ஆடவர், பெண்டிர், பெண்கடவுளர்கள் மற்றும் இராமாயண, மஹாபாரத, மற்றும் கிருஷ்ணலீலா காட்சிகள் பாங்குற படைக்கப் பட்டுள்ளன. நடுப்பகுதியான கருவறையின் சுவர்களில் நூற்றிருபது சிற்பங்கள் எடுப்பான தோற்றமும் நுட்ப வேலைபாடுகளுடன் இசைக்கருவிகள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களில் சிவனின் திருக்கோலங்கள் முன்னிலைப்படுத்தி அமைத்திருப்பது சிறப்பு. நடனமாடும் சரஸ்வதி பார்வதி, பிரம்மா, வாசுதேவன் யோகமாதவா, காலிங்கநர்தனன் ஆடல்மகளிர் இசைக்கருவிகள் என பல்வேறு சிற்பங்கள் ஹொய்சாளர் காலத்திய கலை பண்பாட்டு சிறப்பினை நமக்கு காட்டுவனவாய் அமைந்துள்ளது.

Ref
The Archaeological Survey of India (ASI) displays a board at the temple. 
In Tamil by John Peter, Former Curator of ASI, and Veludharan.









HISTORY AND INSCRIPTIONS
No inscriptions were found to prove its antiquity. Based on the architecture and iconography of the sculptures, there is a similarity with the Nakkehalli Lakshmi Narasimhar and the Kesava temple of Somanathapuram. Hence, it was concluded by the Kannada historians that the temple might have been built by the sculptor Mallithamma during the Hoysala Kinga Vira Someshwara period (1250 CE). Later received contributions from the Wodeyars.

இக்கோயிலில் கல்வெட்டுகள் காணப்படாமையால் இவற்றின் காலம் குறித்து அறுதியிட்டு கூறுதல் கடினம். ஆயினும் கோயில் கட்டுமானம், சிற்பங்களின் வடிவமைப்பைக் கண்ணுறுங்கால் நக்கேஹள்ளியிலுள்ள லஷ்மி நரசிம்மர் கோயில் சோமநாதபுரத்திலுள்ள கேசவர் கோயிலினையும் ஒத்து அமைந்து இருப்பதால் இக்கோயில் மல்லிதம்மா என்ற சிற்பியால் 1240 CE ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என கன்னட வரலாற்றாய்வாளர்கள் ஒருவாறு கணிக்கின்றனர்.

LEGENDS

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, some of the special poojas are also conducted.

TEMPLE TIMINGS
The temple will be kept open from 09.00 hrs to 18.00 hrs.

CONTACT DETAILS
The mobile number of Bhattachariyar, +918105577694, may be contacted for further details.

HOW TO REACH
The temple at Hosaholalu is about 16 km from Kikkeri, 21.4 km from Govindanahalli, 27 km from Shravanabelagola, 36 km from Chennarayapattana, 38.4 km from Srirangapatna, and 58 km from Mysore.
The nearest Railway Station is Shravanabelagola.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE

Mahavishnu's avatar, Buddha
Mahavishnu's avatar



Krishna

Ornaments
Ornaments
Ornaments

Dancing Saraswati



Visha kanni
Bairavi
Bairavi

Mahabharat war Chakra Vyugam

Mahabharat war
Mahabharat war
Makeup

NAVARANGA MANDAPAM




Madanika
Madanika
Madanika
Hoysala's emblem

--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment